Sunday, May 18, 2025
Huis Blog

மமதையோடு செயற்பட்டால் பாடம் புகட்டவேண்டி வரும்; ஸ்ரீதரன் எம்.பி..!

0

தமிழ் கட்சிகள் மமதையோடு செயற்பட்டால் எதிர்வரும் தேர்தலில் வேறொரு பாடத்தைக் கற்க வேண்டிய நிலை உருவாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் கூறுகையில்,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு குறைந்துள்ளது என்று கூற முடியாது எனவும் அவர் கூறினார்.

தேசிய மக்கள் சக்திக்கு சற்று வாக்கு குறைந்துள்ளதே தவிர, அவர்களுக்கான ஆதரவு தற்போதும் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் உள்ள தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களைப் பெற்றதன் பின்னர் தற்போது செல்வாக்கு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

எனவே தமிழ் கட்சிகள் மமதையோடு செயற்பட்டால் எதிர்வரும் தேர்தலில் வேறொரு பாடத்தைக் கற்க வேண்டிய நிலை உருவாகும் என கூறிய ஸ்ரீதரன் எம்.பி , தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கொட்டாஞ்சேனை மாணவி தொடர்பில் பிரதமரின் கருத்து; வெடித்த சர்ச்சை..!

0

கொட்டாஞ்சேனை மாணவி விடயத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற உடனேயே அது தொடர்பில் உரிய முறையில் தகவல் பதிவாகவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (09) இ்டம்பெற்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

“இந்த விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை என்பது தொடர்பிலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தொடர்பில் எதற்காக உரிய முறையில் தகவல் வழங்கவில்லை என்பது தொடர்பிலும், கொட்டாஞ்சேனை மாணவி பயின்ற பம்பலப்பிட்டியில் உள்ள மகளிர் பாடசாலையின் அதிபரிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் தடுப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, காவல்துறை ஆகிய தரப்புகள் அடங்கும் வகையிலான செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இவ்வாறான சம்பவம் பதிவாகுமாயின் குறித்த நான்கு நிறுவனங்களும் அறிந்திருக்க வேண்டும் என்ற வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது” என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் கூடிய குறித்த விடயம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணமும் பின்னால் உள்ள அரசியலும்..!

0

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றதனை அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை அதன் உண்மைத் தன்மை தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு குறித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு உயர்ந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை எனினும் சில அரசியல் தரப்புக்களால் குறித்த விடயம் திசை திருப்பப்பட்டு வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில் இந்த விடயத்தில் இரண்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. முதலாவது குறித்த மாணவியால் ஆசிரியர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு, இரண்டாவது தனியார் கல்வி நிலைய ஆசிரியரால் அவமானப்படுத்தப்பட்டதாக கூறும் சம்பவம். ஆக இரண்டும் ஒரே சம்பவம் அல்ல இங்கு இரண்டு சம்பவங்கள் இரண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

முதலாவது சம்பவமானது ஆசிரியரால் மாணவி துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம், குறித்த சம்பவமானது கடந்த 2024ம் ஆண்டு இடம் பெற்றதாகவும் அது தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றது.

குறித்த வழக்கில் பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டு ஆசிரியர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. குறித்த வழக்கில் மாணவி பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பின் குறித்த ஆசிரியருக்கு பிணை வழங்கப்பட்டிருக்க மாட்டாது.

குறித்த சம்பவத்தின் பின்னர் குறித்த மாணவி வேறு பாடசாலைக்கு விலகிச் சென்று கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இரண்டாவது சம்பவம், மாணவியின் மரணத்திற்கு ஒரு சில தினங்களிற்கு முன்னர் தனியார் கல்வி நிலையத்தில் கற்றலில் ஈடுபட்டிருந்த போது குறித்த கல்வி நிலைய ஆசிரியர் ஒருவரால் அவமானப் படுத்தப்பட்டதாகவும், அதனால் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இதில் அவமானம் ஒன்று நிகழ்ந்திருப்பின் குற்றவாளி குறித்த கல்வி நிலைய ஆசிரியரே.

இந் நிலையில் குறித்த சம்பவம் காரணமாக ஒரு மாணவியின் உயிர் வீணே இழக்கப்பட்டுள்ளது. அதற்கான தீர்வு குறித்த மரணத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அதேவேளை இதுவரை குறித்த மாணவியின் பெற்றோரால் முறைப்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. என்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடக சந்திப்புக்கள், போராட்டங்களை மட்டும் நடாத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

அதாவது மகளீர் விவகார அமைச்சர் நேரடியாக வருமாறு அழைப்பு விடுத்த போதும், சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தில் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கூறிய போதும் அவைகள் எதனையும் மேற்கொள்ளாது கண்டனப் போராட்டங்களை மேற்கொள்வதாலோ, சமூக வலைத்தளங்களில் எழுதுவதாலோ தீர்வையோ, நீதியையோ பெற்றுக் கொள்ள முடியாது.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், முஜிபுர் ரஃமான் உட்பட பலர் குரல் கொடுத்து வருகின்றனர். உண்மையில் வரவேற்கத்தக்கது. எனினும் அதற்கு பின்னாலும் தேசிய மக்கள் சக்திக்கு எதிரான விசமத்தனமான அரசியலை காண முடிகின்றது.

இங்கு இரண்டு சம்பவம், இரு குற்றச் சந்தேக நபர்கள், இவர்களுக்கு அப்பால் பெற்றோர், சக மாணவிகள் என்போரும் குற்றச் சந்தேக வலயத்திற்குள் உள்ளனர். இந்த நிலையில் ஒருதலைப் பட்சமாக ஆசிரியரை மட்டும் குற்றவாளிகளாக்க பல்வேறு தரப்பினரும் முயல்வதன் நோக்கம் என்ன?

குறித்த மாணவி தற்கொலை செய்த நேரத்தில் வீட்டில் இருந்தவர்கள், வீட்டில் நடந்த சம்பவம், மாணவியின் உடற்கூற்று அறிக்கை, உள்ளிட்டவைகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் ஒருதலைப் பட்சமாக ஒருவரை நோக்கி கை நீட்டுவது என்பது தவறான முன்னுதாரணம்.

அதேபோல் விசாரணைகளே முடிவுறாத நிலையில் வடகிழக்கில் மட்டும் இயங்கும் தமிழர் ஆசிரியர் சங்கம் குறித்த ஆசிரியருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்பது அவர்களின் கல்வி பின் புலத்தையே ஐயப்படுத்துவதாக அமைந்துள்ளது. விசாரணைகள் நடைபெற்று, குற்றம் உறுதிப் படுத்தப்பட்டால் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமே தவிர விசாரணையே நடைபெறாது தண்டனை வழங்கும் நடைமுறை இலங்கைச் சட்டத்தில் உள்ளதா???

அடுத்து குறித்த மாணவி விழும் வீடியோவை அவதானிக்கும் போது உடல் அசைவு இன்றியே விழுவது போன்று உள்ளதுடன், அவர்களின் பெற்றோரின் முகத்தில் அவ்வளவு கவலையை காண முடியவில்லை என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

எனவே சட்டம் தனது கடமையை செய்யும், நீதித்துறை சுயாதீனமானது அதுவும் தனது கடமையை சரிவரச் செய்யும், சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி பாதிக்கக் கூடாது இதில் குற்றவாளி யார் என்பதை பொலிசாரும், நீதிமன்றமும் விரைவில் வெளிப்படுத்தும் அதுவரை உங்கள் வட்டார, குறுகிய அரசியலை ஓரங்கட்டி வைத்து விட்டு நீதிக்கு மதிப்பளித்து செயற்படுங்கள்.

கனடாவிலிருந்து வந்து வவுனியாவில் 17 வயது யுவதியுடன் ஜல்சா புரிந்த அங்கிள்..!

0

கனடாவிலிருந்து வந்த 49 வயதான குடும்பஸ்தர் வவுனியாவில் இளம் யுவதி ஒருவருடன் உறவு கொண்டபின் 35 லட்சம் ரூபா பணத்தை யுவதிக்கு தாரை வார்த்துள்ளார். கடந்த வருட நடுப் பகுதியில் கனடாவிலிருந்து வந்து ஓமந்தை மூன்றுமுறிப்புப் பகுதியில் பல ஏக்கர் காணி வாங்கி அதில் பண்ணை ஆரம்பிக்கும் நடவடிக்கையை தொடங்கியிருந்தார் கனடாவை வதிவிடமாகக் கொண்ட குடும்பஸ்தர்.

அந்தக் காணியை துப்பரவு செய்வதற்காக பலரை வேலைக்கு அமர்த்தி துப்பரவுப் பணியை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் உள்ள கணவனை இழந்த குடும்பப் பெண் ஒருவருடன் குடும்பஸ்தருக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்தப் பெண்ணின் மூத்த மகளை குறித்த குடும்பஸ்தர் பல இடங்களுக்கும் காரில் கொண்டு திரிந்துள்ளார். 17 வயது யுவதியான குடும்பப் பெண்ணின் மகளுக்கு ஏற்கனவே காதலன் ஒருவன் இருந்ததை கனடா குடும்பஸ்தர் அறியவில்லை. இவ்வாறான நிலையில் குறித்த யுவதி கர்ப்பம் தரித்துள்ளார்.

இதனையடுத்து யுவதியின் தாயார் குறித்த குடும்பஸ்தரை கடுமையாக அச்சுறுத்தி கர்ப்பத்திற்கு காரணம் நீதான் என கூறி பொலிசாரிடம் முறையிடப் போவதாகவும் அச்சுறுத்தி வந்ததுடன் பெருமளவு பணம் கேட்டு தொல்லைப்படுத்தியதாகவும் தெரிய வருகின்றது.

பொலிசாருக்குப் போனால் தன்னை பிடித்து சிறை வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் யுவதியின் தாயாருக்கு பகுதி பகுதியாக 4 தடவைகளாக 35 லட்சம் ரூபா பணம் வழங்கியுள்ளார் கனடா குடும்பஸ்தர். யுவதி தற்போது 6 மாத கர்ப்பிணி.

இந் நிலையில் யுவதி ஓரிரு மாதங்களுக்கு முன் தனது காதலனை பதிவுத் திருமணம் முடித்து தாண்டிக்குளம் பகுதியில் வாழ்ந்து வருகின்றார்.

இதனையறிந்து அதிர்ச்சியடைந்த கனடா அங்கிள் யுவதியின் தாயாருடன் முரண்பட்டு யுவதியின் கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என கூறி தன்னை அச்சுறுத்தி 35 லட்சம் பணம் பறித்தாக பொலிசாரிடம் முறையிடப் போவதாக யுவதியின் தாயாரிடம் கூறியுள்ளார்.

கனடா அங்கிளின் ஆவேசத்தையடுத்து யுவதியின் தற்போதைய கணவன் கனடா அங்கிளின் பண்ணைக்கு வந்து அங்கிளை துரத்தித் துரத்தி தாக்கியதாகத் தெரிய வருகின்றது.

அத்துடன் 17வயதான சிறுமியை கற்பழித்த நீ சிறைக்குள் இருக்க வேண்டியவன், அவளை ஏற்று நான் திருமணம் முடித்துள்ளேன் என தெரிவித்து தாக்கியதாக தெரிய வருகின்றது.

இச் சம்பவத்தின் பின் கனடா அங்கிள் பண்ணையிலிருந்து தலைமறைவாகி உள்ளதாகவும் அங்கு நின்று வேலை செய்த சிங்களப் பெரும்பாண்மையின கூலியாட்கள் 7 பேரின் சம்பளத்தையும் கொடுக்காது அங்கிள் கனடாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிற மத வழிபாடுகளில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்..!

0

இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் பரப்ப வந்த மார்க்கமாகும். மேலும், இம்மார்க்கம் தனி மனிதர்களுக்கும் மனித குலத்திற்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்துவதை அதன் உயரிய குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. மேலும், இஸ்லாம் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலக சமாதானத்தையும் மனித இன ஐக்கியத்தையும் வலியுறுத்துகின்றது.

எமது தாய்நாடான இலங்கை பல இனத்தவர்களும் பல சமூகங்களும் வாழும் நாடாகும். இங்கு வாழும் பிற சமயத்தவர்களுடன் அன்போடு பழகி அவர்கள் மத்தியில் உள்ள ஏழைகள், விதவைகள், நோயாளிகள், அங்கவீனர்கள் போன்றோருக்கு உதவி செய்வதையும் அவர்களது மத வழிபாடு தொடர்பான அனுஷ்டானங்களுடன் சம்பந்தப்படாத விடயங்களில் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதையும் இஸ்லாம் வரவேற்கின்றது. இதுவே இஸ்லாம் கூறும் சகவாழ்வாகும்.

எனினும், சகவாழ்வு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் பிற சமயத்தவர்களின் வணக்க வழிபாடுகளுடன் தொடர்புபடும் மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய மத நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் இஸ்லாமிய வழிமுறையல்ல. இன்னும் ஏனைய மதங்களின் நடைமுறையிலும் இவை காணப்படுவதில்லை.

ஆகவே, முஸ்லிம்கள் தமது இறை நம்பிக்கை (ஈமான்) க்கு முரணான விடயங்களில் ஈடுபடுவதை தவிர்ந்து நடந்து கொள்ளுமாறும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது ஆலிம்களின் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்று குழு மற்றும் ஃபத்வாக் குழு அனைத்து முஸ்லிம்களையும் வினயமாகக் கேட்டுக் கொள்கிறது.

நிறைவேற்றுக் குழு – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

வவுனியா இளைஞன் உயிரிழப்பில் திருப்பம்; உறவினர்கள் பகீர் தகவல்..!

0

வவுனியாவில் , இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து பு நேற்று முன் தினம் (16) மாலை இளைஞன் ஒருவரின் சடலம் இரத்தக் கறைக் காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.

சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிதாசன் (வயது 33) என அடையாளம் காணப்பட்டிருந்தது.

குறித்த இளைஞன் புதுவருட தினத்தன்று (14) காலை வீட்டில் இருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் காலையில் சூடுவெந்தபுலவு வீதியில் நின்றதாகவும் தமது கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, மரணமடைந்த இளைஞன் தன்னை சிலர் தாக்குவதாகவும், உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப் போறேன். பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடும் படியும் கோரியுள்ளார்.

இதனையடுத்து இளைஞனை உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் இறக்கி விடப்பட்டதாகவும், அவர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன்பின் இரண்டு தினங்களின் பின் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள உறவினர்கள், கொலைக் குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பிள்ளையானின் கைதால் கலக்கமடைந்த ரணில் மற்றும் கம்மன்பில – டில்வின் சில்வா

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் கைது செய்யப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருத்தமடைந்துள்ளார் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“வழக்கறிஞர் உதய கம்மன்பில தனது வாழ்க்கையில் ஒருபோதும் ஒரு வழக்கை வாதிட நீதிமன்றத்திற்குச் சென்றதில்லை அவர் முதலில் வாதிடுவது பிள்ளையான் வழக்குக்கே.

ரணில் விக்ரமசிங்க சட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பிள்ளையானுடன் தொலைபேசியில் பேச முயற்சிக்கிறார்.

ஆனால் இப்போது நம்மிடம் இருப்பது முன்பு இருந்தது போன்ற பொலிஸ் அமைப்பு அல்ல. நாங்கள் மாறிவிட்டோம். அவர் முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம். ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்.

அடுத்து, கம்மன்பில அவருக்கு உதவ முயற்சிக்கிறார். ஒரு சாதாரண நபரை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்ட பிறகு, கம்மன்பில தான் வழக்கறிஞர் என்று கூறுகிறார்.

கிழக்கு மாகாணத்தில் எத்தனை குற்றங்கள் நடந்தன என்பது உங்களுக்குத் தெரியும். ஏராளமான பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகப் பேச்சு நிலவுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும் சந்தேகங்கள் உள்ளன. இவை அனைத்தும் நடைமுறையில் இருக்கும் போது, ​​இது போன்ற குற்றங்கள் குறித்து விசாரிக்கப்படும் பிள்ளையானை மீட்பதில் உதய கம்மன்பில தலைவராகிறார்.

இந்த நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட குற்றங்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் என டில்வின் கூறியுள்ளார்.

காரைநகரில் சட்டவிரோத செயலில் பிடிபட்ட NPP வேட்பாளரை விடுவிப்பதற்கு கடும் முயற்சி..!

0

சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மணல் ஏற்றிய வாகனம் பொலிஸ் நிலையத்திலேயே உள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஜனாதிபதி அநுரகுமாரவின் வருகையையடுத்து வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த வேட்பாளர் தொடர்ச்சியாக தனியார் மற்றும் அரச காணிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து காணியின் உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக, அவர் மணல் அகழ்வில் ஈடுபட்டபோது நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது. மணலை உழவு இயந்திர பெட்டியின் அடியில் ஏற்றிவிட்டு மேலே கட்டட இடிபாடுகளை ஏற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஊர்காவற்துறை பொலிஸாரின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவலரணில் கடமை புரியும் பொலிஸாராலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நேற்றிரவு பொலிஸ் நிலையம் சென்று அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் பொலிஸார் விடுதலை செய்யவில்லை. பின்னர் பிணையில் செல்ல அனுமதித்தனர்.

குறித்த நபர் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் என்ற வகையில், இன்றையதினம் ஜனாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு அவரை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

NPP சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி செயற்பாடற்ற 4 தமிழ் உறுப்பினர்கள்..!

0

ஜேவிபி சார்பாக வடக்கு கிழக்குக்கிலிருந்து ஏழு தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்

இவர்களில் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா, ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் கந்தசாமி பிரபு ஆகிய 4 பேர் பாராளுமன்றத்தில் செயல்படாத (Inactive) தமிழ் உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்கள்

குறிப்பாக Manthri.lk என்கிற ஆய்வு நிறுவனம் செயல்பாடுகள் அடிப்படையில் வழங்கியுள்ள தரவரிசையில் இறுதி இடமான 225 ஆவது இடத்தை இவர்கள் நான்கு பேரும் பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்

இதில் செல்லத்தம்பி திலகநாதன் என்பவர் அரிசி பற்றாக்குறைக்கு நாய்கள் தான் காரணம் என்றும் மனிதர்களை விட நாய்கள் அதிக அரிசியை உண்கின்றன என்றும் பாராளமன்றத்தில் உரையாற்றி இருந்தார்.

அதே போல ஸ்ரீ பவானந்தராஜா, செல்லத்தம்பி திலகநாதன், கந்தசாமி பிரபு ஆகியோர் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடுகளுக்கு ஆதரவாக வாக்களித்து இருந்தனர்

இது போதாதென்று இந்த பட்டியலில் உள்ளடங்காத கருணாநந்தன் இளங்குமரன் மற்றும் ஆ.ம ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரும் ஒரு இரு தடவை எழுத்து கூட்டி வாசித்ததை தவிர எந்த Impact யையும் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, கருணாநந்தன் இளங்குமரன் ஆகியோர் பாதீடு தொடர்பான விவாதங்களையே தவிர்த்து வருகின்றார்கள் என சொல்லப்படுகின்றது

திருகோணமலையிலிருந்து ஜேவிபி சார்பாக தெரிவு செய்யப்பட்ட திரு அருண் ஹேமசந்திரா தவிர்ந்த ஏனைய ஆறு உறுப்பினர்களும் விவசாயம், வளங்கள், வர்த்தகம், நிதி, கல்வி, பொருளாதாரம், சட்டம் வேலைவாய்ப்பு உட்பட எந்த விவாதங்களிலும் எதிர்வரும் காலங்களிலும் கூட பங்களிக்க போவதில்லை

மக்கள் சார்ந்து எந்தவொரு தனிநபர் பிரேரணைகளையோ ,எழுத்து மூல கேள்விகளையோ முன்வைக்க போவதில்லை பிரதமர் உட்பட அமைச்சர்களிடம் கூட எந்தவித துறை சார் கேள்விகளையும் எழுப்ப போவதில்லை குறைந்தபட்சம் பொது தளங்களில் நெருக்கடிகள் உருவாகும் போது மக்கள் சார்பாக கூட இவர்கள் யாரும் நிற்க போவதில்லை

ஜேவிபி தலைமைக்கு ஆதரவாக கண்ணை மூடி கொண்டு வாக்கெடுப்புகளில் கையை தூக்குவதை தவிர எதையும் சாதிக்க போவதில்லை சட்டவாக்க சபையான பாராளமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது அவர்களுடைய Integrity and Honesty, Knowledge and Competent, Empathetic and Attuned to Public Concerns, Visionary and Forward-Thinking, Strong Communication Skills, Experience and Track Record பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, காலத்திற்கு காலம் வெறும் கோமாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், பொது மக்கள் சரியான முறையில் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதில்லை

இதற்கிடையில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் மாகாண சபையையிலும் இவ்வாறான ஜேவிபியின் அதி புத்திசாலிகளை வெல்ல வைக்கும் கருத்துருவாக்கங்களை ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர்கள், இலக்கியவாதிகள் வேடங்களில் உள்ள ஒட்டுக்குழுக்கள் மற்றும் அரச துதிபாடிகள் செய்கின்றன.

முப்படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கத் தீர்மானம் – ஜனாதிபதி

0

முப்படைகளிலும் உள்ள வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், அதே நேரத்தில் அவர்கள் உபகரணங்களுடன் அதிநவீன மயமாக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

“இலங்கை இராணுவம் 100,000 பணியாளர்களாகவும், இலங்கை கடற்படை 40,000 ஆகவும், இலங்கை விமானப்படை 18,000 ஆகவும் மட்டுப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

“படைகளுக்கு நவீன உபகரணங்களைப் பெறுவதே எங்கள் நோக்கம். இலங்கை விமானப் படையில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து விமானங்களும் காலாவதியாகி வருகின்றன. எனவே, நாங்கள் புதிய விமானங்களைப் பெறுவோம்.

இலங்கை கடற்படைக்கும் புதிய கைவினைப் பொருட்கள் மற்றும் புதிய உபகரணங்கள் கிடைக்கும். நாங்கள் அதை எந்த தயக்கமும் இல்லாமல் செய்வோம்,” என்று ஜனாதிபதி கூறினார்.

error: Alert !!